/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கை அமைக்கணும்
/
பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கை அமைக்கணும்
ADDED : மார் 28, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,: உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு கூடுதலாக இருக்கை வசதிகளை நகராட்சியினர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கு செல்ல தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் வருகை தருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான போதிய வசதிகள் இல்லை.
குறிப்பாக, இருக்கை வசதிகள் போதுமானதாக இல்லை. இதனால், பயணியர் பஸ்சுக்காக நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே, பயணியருக்கு தேவையான கூடுதல் இருக்கைகளை ஏற்படுத்த உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.