sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுரைக்காய் சாகுபடியில் மகசூல் பெற அட்வைஸ்

/

சுரைக்காய் சாகுபடியில் மகசூல் பெற அட்வைஸ்

சுரைக்காய் சாகுபடியில் மகசூல் பெற அட்வைஸ்

சுரைக்காய் சாகுபடியில் மகசூல் பெற அட்வைஸ்


ADDED : மார் 12, 2025 10:45 PM

Google News

ADDED : மார் 12, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதியில், கிணற்று பாசனத்தில், கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி, பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

இதில், கொடி வகை காய்கறிகளை, குறிப்பிட்ட சீசனை தேர்வு செய்து, சாகுபடி செய்கின்றனர். அதில், சுரைக்காய் சாகுபடியும் ஒன்றாகும்.

தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: சுரைக்காய் கொடிக்கு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். விதை ஊன்றிய 20 முதல் 30 தினங்கள் கழித்து களைகளை அகற்றி, ஒரு ெஹக்டேருக்கு, 20 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டு மண் அனைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

கொடிகள் நிலத்தில் படருவதால், வெயில் மற்றும் மழைக்காலத்தில், பாதிப்பை தவிர்க்க, சின்ன குச்சிகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி நிலத்தில் படாமல் பாதுகாக்கலாம்.

இதன் வாயிலாக, அழுகல் நோய் வராமல் தடுக்கலாம். சுரைக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்து விட வேண்டும். விதை ஊன்றி, 70 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம்.

இந்த வழிமுறைகளில் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு, 20 முதல் 35 டன் வரை அறுவடை செய்யலாம். இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us