sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வண்டல் மண்ணில் வளரும் இலுப்பை மரம்

/

வண்டல் மண்ணில் வளரும் இலுப்பை மரம்

வண்டல் மண்ணில் வளரும் இலுப்பை மரம்

வண்டல் மண்ணில் வளரும் இலுப்பை மரம்


ADDED : ஏப் 27, 2024 12:13 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:இந்தியாவை தாயகமாகக் கொண்ட இலுப்பை மரம், தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது. ஆண்டு மழைப்பொழிவு 800 -மி.மீ., முதல் 1,800 மி.மீ., வரை உள்ள பகுதிகளில் இம்மரங்கள் செழிப்பாக வளர்கின்றன. மணல் கலந்த மண்ணிலும், வண்டல் மண்ணிலும் சிறப்பாக வளர்கிறது.

நாற்றங்காலில் உள்ள ஓராண்டு நிரம்பிய நாற்றுகள் வயல்களில், மழைக்காலங்களில் நடவு செய்யலாம். மே மற்றும் ஜூன் மாதங்களில் நடப்படுகிறது. நடவின்பொழுது ஆணிவேரை அசைக்காமல் கவனத்துடன் நடவு செய்ய வேண்டும்.

மூன்று மாத இடைவெளிகளில் களைநீக்கம் செய்து செடியைச் சுற்றிலும் லேசாகக் கிளறி விட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை களை நீக்கம் செய்வது அவசியம்.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பழுத்த பழங்கள் உள்ள கிளைகளை உலுக்குவாதல், சேகரிக்கப்படுகின்றன.

இப்பழங்கள் தரைகளில் உரசப்பட்டு நீரில் உளற வைக்கப்பட்டு விதையுறைகளிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

நடவு செய்த, 15 நாட்களுக்குப் பிறகே விதை முளைக்கும். இந்நாற்றுகள் ஓராண்டு வரை நேரடியான வெயில் படாமல் பாதுகாக்கப்படுகின்றன. மிக கடினமான மரக்கட்டைகள் கட்டுமானம் மற்றும் மரச்சாமான்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு, மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை விவசாயிகள் அணுகலாம், என, கோவை வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us