sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனைத்து மாணவ, மாணவியரும் உயர் கல்வியை தொடர வேண்டும்!

/

அனைத்து மாணவ, மாணவியரும் உயர் கல்வியை தொடர வேண்டும்!

அனைத்து மாணவ, மாணவியரும் உயர் கல்வியை தொடர வேண்டும்!

அனைத்து மாணவ, மாணவியரும் உயர் கல்வியை தொடர வேண்டும்!


ADDED : மே 06, 2024 11:10 PM

Google News

ADDED : மே 06, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை தொடர வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. 97.45 சதவீத தேர்ச்சியுடன், திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்பட கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

கலெக்டர் கிறிஸ்துராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வில், 97.45 சதவீத தேர்ச்சியுடன், திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியர், 10 ஆயிரத்து, 483 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில், 10 ஆயிரத்து 37 மாணவர்கள், அதாவது 95.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 242 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடின உழைப்பே, வெற்றியை தேடித்தந்துள்ளது. மாணவர்கள், படிப்பை கைவிட்டுவிடக்கூடாது. தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் கட்டாயம் உயர் கல்வியில் சேரவேண்டும். கல்லுாரிக்கு சென்று, நன்றாக படிக்க வேண்டும். மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us