/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரிசல் மண்ணில் செழிக்கும் அரளி! வேளாண் பல்கலை அறிவுறுத்தல்
/
கரிசல் மண்ணில் செழிக்கும் அரளி! வேளாண் பல்கலை அறிவுறுத்தல்
கரிசல் மண்ணில் செழிக்கும் அரளி! வேளாண் பல்கலை அறிவுறுத்தல்
கரிசல் மண்ணில் செழிக்கும் அரளி! வேளாண் பல்கலை அறிவுறுத்தல்
ADDED : மே 03, 2024 11:09 PM
உடுமலை:கரிசல் மண் பரப்பில், அதிக நோய்த்தாக்குதல் இல்லாத அரளியை சாகுபடி செய்யலாம் என கோவை வேளாண் பல்கலை., அறிவுறுத்தியுள்ளது.
அரளியில், தனிரோஸ், தனிவெள்ளை, தனிச்சிவப்பு மற்றும் இரண்டு அடுக்கு வகைகள் உள்ளன. கரிசல் அல்லது மணற்பாங்கான செம்மண் கலந்த மண்ணில் நல்ல வடிகால் வசதியுடன் நீர் வளம் உள்ள சூழ்நிலையில் அதிக வெப்பநிலையில் நன்கு வளரக்கூடியது.
இரண்டு அடி நீளமுள்ள கடினமான அல்லது மித கடினமான குச்சிகளை மண்ணில் விளைவாகப் பதிப்பதன் வாயிலாக வளர்க்கலாம். வேர் வந்த குச்சிகளை ஜூன் - ஜூலை மாதத்தில், ஒரு அடி ஆழமுள்ள குழியில் இரண்டு மீட்டர் இடைவெளியில் நடலாம்.
நடும் முன் குழியில் தொழு உரம், செம்மண் மற்றும் மேல் மண் சேர்த்து இடவேண்டும். அரளி செடிக்கு தண்ணீர் தேவைப்படும்பொழுதெல்லாம் நீர் பாய்ச்ச வேண்டும்.
ஜனவரி மாதத்திலும், ஆகஸ்ட் மாதத்திலும், 10 டன் தொழு உரம் ஒரு ெஹக்டேருக்கு இடவேண்டும். ரசாயன உரங்கள் பொதுவாக இடவேண்டிய அவசியமில்லை.
பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளோ, நோய்களோ அரளியைத்தாக்குவதில்லை. ஆண்டின் எல்லா காலங்களிலும் பூக்கக் கூடியது. ஏப்., மாதத்தில் இருந்து ஆக., மாதம் வரை அதிகமாக பூக்கும்.
பூக்களை நட்ட நான்கு மாதத்திலிருந்து பெறலாம். நாளொன்றுக்கு, ஒரு ெஹக்டேரிலிருந்து 100 முதல் 125 கிலோ பூக்கள் கிடைக்கும்.
இவ்வாறு, அறிவுறுத்தியுள்ளது.