ADDED : ஏப் 17, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கார் மோதி, முதியவர் காயமடைந்தார்.
காங்கயம், படியூர், நல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் குமரன், 60; தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, படியூர், கைகாட்டி பிரிவு அருகே ரோட்டோரம் நடந்து சென்றார்.
அப்போது, திருப்பூரில் இருந்து காங்கயம் நோக்கி சிவன்மலை கோவில் உதவி கமிஷனரின் கார், முதியவர் மீது மோதியது. காயமடைந்த அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு கார் மோதியது குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

