sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பறவை காய்ச்சல் தடுப்பு கூடுதல் இயக்குனர் ஆய்வு

/

பறவை காய்ச்சல் தடுப்பு கூடுதல் இயக்குனர் ஆய்வு

பறவை காய்ச்சல் தடுப்பு கூடுதல் இயக்குனர் ஆய்வு

பறவை காய்ச்சல் தடுப்பு கூடுதல் இயக்குனர் ஆய்வு


ADDED : மே 16, 2024 04:35 AM

Google News

ADDED : மே 16, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் நவநீத கிருஷ்ணன் நேற்று, திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில், சேமலை கவுண்டம்புதுாரில் அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணையில் ஆய்வு நடத்தினார். பல்லடம் கால்நடை மருத்துவமனையில் நடந்த, கோடை கால கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற கூடுதல் இயக்குனர், கால்நடை விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கினார்.

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் கவுசல்யாதேவி முன்னிலை வகித்தார்.

அதிகாரிகள் பேசுகையில், 'கடந்த மாதம் இறுதியில் இருந்து, ஆடுகளுக்கு, ஆட்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பறவை காய்ச்சலால், கேரளாவில் கோழிகள், முட்டைகள் திருப்பூர் மாவட்டத்துக்குள் கொண்டுவரப்படுவதை தடுக்கும்வகையில், அமராவதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாகன டயர்களில் குளோரின் டை ஆக்சைடு தெளிக்கப்படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us