sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தரமற்ற தார் ரோடு; மக்கள் குற்றச்சாட்டு

/

தரமற்ற தார் ரோடு; மக்கள் குற்றச்சாட்டு

தரமற்ற தார் ரோடு; மக்கள் குற்றச்சாட்டு

தரமற்ற தார் ரோடு; மக்கள் குற்றச்சாட்டு


ADDED : மே 30, 2024 12:45 AM

Google News

ADDED : மே 30, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட பகுதி கொக்குப்பாறை. இங்கு பிரதான வீதி, கிரீன் அவென்யூ, சக்தி கார்டன், திருமலை வி.ஐ.பி., குடியிருப்பு பகுதி ஆகிய பகுதிகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், 89 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாள் முன் துவங்கிய இப்பணி தொடர் மழை காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உரிய தரத்துடன் தார் ரோடு இல்லை என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:

இப்பகுதியில் மண் ரோடு இருந்தது. தற்போது, தார் ரோடு போடும் பணி நடக்கிறது. 'எர்த் ஒர்க்' எனப்படும் பாதை சமன் செய்யும் பணி முடிந்து அதன்மீது, 'வெட் மிக்ஸ்' (ஜல்லி மண் கலவை) பரப்பி சமன் செய்யப்படும். அப்பணி தான் இன்று (நேற்று) துவங்கி தற்போது நடக்கிறது.

வாகனங்கள் அனுமதித்து, சாலை சமன் செய்து, ஜி.எஸ்.பி., கலவை பரப்பி, அதன்பின் தார் ரோடு அமைக்கப்படும். ரோடு பணி முறையாக கண்காணிக்கப்பட்டு, பணி முடிந்து உரிய தர பரிசோதனைக்குப் பின் ஒப்பந்தாரருக்கு தொகை விடுவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us