/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபர் மீது தாக்குதல் பா.ஜ., நிர்வாகி கைது
/
வாலிபர் மீது தாக்குதல் பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : ஆக 05, 2024 09:15 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம், காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர், 24. கடந்த பிப்., மாதம் காங்கயம் - கோவை ரோட்டில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும், பா.ஜ., தெற்கு ஒன்றிய பொது செயலராக உள்ள சதீஷ்குமார், 30, என்பவரிடம், டூ-வீலருக்கு, 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார்.
ஒரு மாத தவணை மட்டும் சங்கர் செலுத்தினார். சதீஷ்குமார், சங்கரிடம் மாத தவணை செலுத்த வேண்டும் அல்லது டூ-வீலரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று முன்தினம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வரச்சொல்லி, சதீஷ்குமாரை, சங்கர் தாக்கியதாக கூறப்படுகிறது.
சங்கர் அளித்த புகாரின் படி, சதீஷ்குமாரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், காங்கயம் போலீசார் கைது செய்தனர்.