/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழித்தடமே இல்லாமல் வாங்கிய இடம் திட்டம் முடக்கம்; வரிப்பணம் விரயம்
/
வழித்தடமே இல்லாமல் வாங்கிய இடம் திட்டம் முடக்கம்; வரிப்பணம் விரயம்
வழித்தடமே இல்லாமல் வாங்கிய இடம் திட்டம் முடக்கம்; வரிப்பணம் விரயம்
வழித்தடமே இல்லாமல் வாங்கிய இடம் திட்டம் முடக்கம்; வரிப்பணம் விரயம்
ADDED : ஜூன் 27, 2024 11:27 PM

பல்லடம் : பல்லடம் நகராட்சி குப்பைகளை உரமாக மாற்றுவதற்காக வாங்கப்பட்ட ஐந்தரை ஏக்கர் நிலத்துக்கு வழித்தடமே இல்லாததால், கடந்த 11 ஆண்டுகளாக, இந்த இடம் முடங்கியிருக்கிறது. மக்கள் வரிப்பணம் இவ்வாறு வீணாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பல்லடம் நகராட்சி, 18 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரிக்கவும், உரமாக மாற்றுவதற்கும் நகராட்சி பகுதியில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வார்டு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இவ்வாறு, 2013ல், கேத்தனுார் கிராமத்தில், குப்பை கொட்ட ஐந்தரை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட இந்த இடத்துக்கு செல்வதற்கான வழித்தடமே இல்லை என்பது பின்னரே தெரிந்தது.
இதனால், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட இந்த இடம், பயன்பாடின்றி கைவிடப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடம், எந்தவித பயன்பாடும் இன்றி முட்புதர்கள் மண்டி காடு போல் காட்சியளித்து வருகிறது.
மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.
--
கேத்தனுார் கிராமத்தில், 11 ஆண்டாக பயன்பாடின்றி கிடக்கும் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடம்.