ADDED : ஜூலை 10, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், அரசு கலைக்கல்லுாரி, முதலாம் ஆண்டு வழிகாட்டி பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) புஷ்பலதா தலைமை வகித்தார். தமிழ்த்துறைத்தலைவர் சீத்தாராமன் வரவேற்றார்.
தாராபுரம் டி.எஸ்.பி., கலையரசன் பேசுகையில்,' சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்; ஒழுக்கம், வாழ்க்கை சிறக்க உதவும். போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வாழ்வில் சிறப்பான இடத்தை அடைய புத்தக வாசிப்பு உறுதுணையாக இருக்கும்; போட்டி தேர்வுக்கும் உதவும்,' என்றார்.