/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நள்ளிரவில் பூத்த 'பிரம்ம கமலம்'
/
நள்ளிரவில் பூத்த 'பிரம்ம கமலம்'
ADDED : ஜூலை 22, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது 'நிஷாகந்தி' எனப்படும் 'பிரம்ம கமலம்' பூ. சிவபெருமானுக்கு விருப்பமான மலராக கருதப்படுகிறது. மிகுந்த மணம் நிறைந்த இந்த பூ இரவில் பூத்து அதிகாலையில் வாடிவிடும் தன்மை கொண்டது.
பல்லடம் அடுத்த, எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அமராவதியப்பன் 56; விவசாயி. இவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பிரம்ம கமலம் பூ, நேற்று முன் தினம் நள்ளிரவு பூத்தது. குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.