ADDED : ஜூன் 03, 2024 12:57 AM
இடுவம்பாளையம், செல்வவிநாயகர் கோவில் ஆண்டு விழா, கயிலை அறக்கட்டளையின் பஞ்சபுராண பாராயணம் சான்றிதழ் வழங்கும் விழா ஆகியன நடந்தன.
ஸ்ரீஆடல் வல்லான் திருக்கூட்டம், திருப்பூர் மாவட்ட கயிலை அறக்கட்டளை பொறுப்பாளர் சாந்தி வரதராஜன் தலைமை வகித்தார். திருவாசகம் முற்றோதுதல் குழு பொறுப்பாளர் ஞானாம்பாள் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தவமணி வரவேற்றார்.
சுந்தர்வகோட்டை கயிலை அறக்கட்டளை நிறுவனர் கயிலை துரைசாமி பஞ்சபுராணம் பாராயணம் செய்த மாணவர்களுக்கு, சான்றிதழ்களை வழங்கி பேசினார். அதிதி நாட்டியக்குழு சார்பில், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கயிலை அறக்கட்டளை பொறுப்பாளர் சிவதிருவைகுந்த வாசகன் நன்றி கூறினார்.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் சண்முகம், செல்வராஜ், சுரேஷ்குமார், கணேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.