sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அறநிலையத்துறை பணி: அமைச்சர் ஆய்வு

/

அறநிலையத்துறை பணி: அமைச்சர் ஆய்வு

அறநிலையத்துறை பணி: அமைச்சர் ஆய்வு

அறநிலையத்துறை பணி: அமைச்சர் ஆய்வு


ADDED : ஆக 14, 2024 01:04 AM

Google News

ADDED : ஆக 14, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:ஹிந்து அறநிலையத்துறை, மாவட்ட நுாலகம், ஊரக வளர்ச்சித்துறை,நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்டத்தில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், 97 பணிகளுக்காக, 10.78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 70 பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.7.46 கோடி மதிப்பிலான 27 பணிகள் நடைபெற்று வருகின்றன.

திட்ட பணிகளை ஆய்வு செய்து, அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''2022 - 23ம் நிதியாண்டில், 243 பணிகளுக்கு, 31.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 243 பணிகள் துவங்கப்பட்டன. இரண்டு பணிகள் முடிவடைந்துள்ளன;ரூ. 27.76 கோடி மதிப்பில், 241 பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஹிந்து அறநிலையத்துறை சார்பில், 2023 - 24ம் நிதியாண்டில், 27.25 கோடி மதிப்பீட்டில், 88 பணிகள் துவக்கப்பட்டன. 41 பணிகள் முடிவடைந்தநிலையில், ரூ.22.41கோடி மதிப்பீட்டில், 47 பணிகள் நடைபெற்று வருகின்றன,'' என்றார்.






      Dinamalar
      Follow us