sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிக்கண்ணா கல்லுாரியில் மாணவர் சேர்க்கை வரும், 30ம் தேதி கவுன்சிலிங் துவக்கம்

/

சிக்கண்ணா கல்லுாரியில் மாணவர் சேர்க்கை வரும், 30ம் தேதி கவுன்சிலிங் துவக்கம்

சிக்கண்ணா கல்லுாரியில் மாணவர் சேர்க்கை வரும், 30ம் தேதி கவுன்சிலிங் துவக்கம்

சிக்கண்ணா கல்லுாரியில் மாணவர் சேர்க்கை வரும், 30ம் தேதி கவுன்சிலிங் துவக்கம்


ADDED : மே 28, 2024 12:42 AM

Google News

ADDED : மே 28, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கவுன்சிலிங், 30ம் தேதி துவங்குகிறது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:

மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் www.cgac.in என்ற கல்லுாரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தர வரிசையை அறிந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'ஏ' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை வரும், 30ம் தேதி, காலை, 9:00 மணிக்கு நடக்கிறது.

வணிகவியல் மற்றும் கலைப்பிரிவுகளுக்கான பாடப்பிரிவுகளுக்கு (பி.காம், பி.காம்., - சி.ஏ., பி.காம்.,. - ஐ.பி., பி.பி.ஏ., வரலாறு, பொருளியல்) கலந்தாய்வு, அடுத்த மாதம், 10, 11 தேதிகளில் நடத்தப்படுகிறது. 12, 13 ஆகிய தேதிகளில், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான (வேதியியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் ஆடை வடிவமைப்பு நாகரிகம்) கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 14ம் தேதி காலை, தமிழ் இலக்கியம்; மாலை, ஆங்கில இலக்கிய பாடப்பிரிவுகளுக்கு, கலந்தாய்வு நடக்கும்.

கலந்தாய்வில் பங்கேற்க வருபவர்கள் பெற்றோருடன் வர வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு, 6 போட்டோ எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us