ADDED : ஜூன் 08, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;துணை கலெக்டர் நிலையிலான இரண்டு அதிகாரிகளை, பதவி உயர்வு மூலம், மாவட்ட வருவாய் அலுவலர்களாக பணி நியமனம் செய்து அரசு செயலர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரான (பொது) விஜயராஜ், பதவி உயர்வு பெற்று, சென்னை தேசிய நெடுஞ்சாலை நில நிர்வாக ஆணையரக தனி மாவட்ட வருவாய் அலுவலராக (நிலம் எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதில், திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.