ADDED : ஆக 06, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கோடம்பாளையம் ஊராட்சி, குருக்கம்பாளையம் ஊராட்சி, எல்லைப்பாளையம் புதுார் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில், 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணி துவங்கப்பட்டது. அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்தார்.
தொடர்ந்து, நிறைவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். குறிப்பாக, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட குறைவான மின் அழுத்த டிரான்ஸ்பார்மர்களை, பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.