sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இயல்பு நிலைக்கு திரும்பும் மாநகராட்சி அலுவலகம்

/

இயல்பு நிலைக்கு திரும்பும் மாநகராட்சி அலுவலகம்

இயல்பு நிலைக்கு திரும்பும் மாநகராட்சி அலுவலகம்

இயல்பு நிலைக்கு திரும்பும் மாநகராட்சி அலுவலகம்


ADDED : ஜூன் 08, 2024 11:41 PM

Google News

ADDED : ஜூன் 08, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்கள் பூட்டப்பட்டன.

உள்ளாட்சி அமைப்புகளில் இடம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளான மாநகராட்சி மேயர், நகராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் உள்ளிட்டோர் தாங்கள் பயன்படுத்திய அரசு வாகனங்களை ஒப்படைத்தனர்.

உள்ளாட்சி அமைப்புகள் கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம், கிராம சபா கூட்டம், குறை கேட்பு கூட்டம், நலத் திட்டங்கள் வழங்குதல், புதிய திட்டங்கள் துவக்கம் போன்றவை மேற்கொள்ளப்படவில்லை.வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ம் தேதி துவங்கி, பல கட்ட ஓட்டுப் பதிவுகள் ஜூன் 1 ம் தேதி வரை நடந்தது.

இந்த ஓட்டு எண்ணிக்கை கடந்த, 4ம் தேதி நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்பின் கடந்த, 6ம் தேதி நள்ளிரவுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்திலும், 7ம் தேதி முதல் வழக்கமான பணிகள் துவங்கின.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிப்., 27ம் தேதி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நடந்தது. அதன் பின் லோக்சபா தேர்தல் அறிவிப்பு காரணமாக மேயர், துணை மேயர் அலுவலகங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 7ம் தேதி முதல் வழக்கமான பணிகள் துவங்க அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் சென்னையில் கட்சி தலைவர்களுடன் சந்திப்புக்குச் சென்று விட்டனர். இதையடுத்து ஏறத்தாழ கடந்த மூன்று மாதமாக இயங்காத திருப்பூர் மேயர் அலுவலகம், துணை மேயர் அலுவலகம் ஆகியன நேற்று திறக்கப்பட்டு, சுத்தம் செய்து தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாளை (10ம் தேதி) முதல் இந்த அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும்.






      Dinamalar
      Follow us