sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தம்பதியர் பேட்டி: குழந்தைகளுக்கு பெரியவர்களின் உதவி, கவனிப்பு கட்டாயத் தேவை

/

தம்பதியர் பேட்டி: குழந்தைகளுக்கு பெரியவர்களின் உதவி, கவனிப்பு கட்டாயத் தேவை

தம்பதியர் பேட்டி: குழந்தைகளுக்கு பெரியவர்களின் உதவி, கவனிப்பு கட்டாயத் தேவை

தம்பதியர் பேட்டி: குழந்தைகளுக்கு பெரியவர்களின் உதவி, கவனிப்பு கட்டாயத் தேவை


ADDED : செப் 16, 2024 12:13 AM

Google News

ADDED : செப் 16, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர், பிரபு; செஞ்சேரிப்புத்துார் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் மகேஸ்வரி; இருவரும் தம்பதியர்; திருப்பூர், மங்கலம் ரோட்டில் வசிக்கின்றனர்.

பிரபு - மகேஸ்வரி கூறியதாவது:

தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்வதால், பொருளாதாரத்தில் மேம்பாடு அடையமுடியும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை, சமூகத்தில் நல்ல மரியாதை அதிகரிக்கும். அதே சமயம் குடும்பத்தாருடன் செலவிடும் நேரம் குறையும். குழந்தைகள் வளர்ப்பு என்பது மிகப் பெரும் சவாலாக இருக்கும். உடல் நலத்தைக் கூட சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாது. வேறு ஊர்களில் பணியாற்றி ஒரே இடத்தில் வசிப்பது கூடப்பரவாயில்லை. வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றுவோர் நிலை மிகவும் சிரமம்.குழந்தைகளைப் பராமரிக்க வீட்டில் பெரியவர்கள் உதவி மற்றும் கவனிப்பு கட்டாயம் தேவையாக உள்ளது. பள்ளிப் பாடங்களைக் கற்றுத் தர, படிக்க வைக்க பெற்றோர் தங்கள் பங்களிப்பைச் செலுத்துகின்றனர். அதே போல் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவர்கள் தேவைகளை அறிந்து, அதை நிறைவேற்றவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் பெற்றோர்கள் அன்பும், அக்கறையும் காட்ட வேண்டும்.

ஆசிரியராக இருந்து பாடம் கற்கிறோம்

''இன்றைய சூழ்நிலையில், சில குடும்பங்களில் பெற்றோர்கள் பிரச்னையால் குழந்தைகள் நடவடிக்கை, குணங்கள் மாற்றம் அடைகிறது. பள்ளிகளில் சில மாணவர்கள் நடவடிக்கை சற்று மாறுபட்டிருந்தால் அது குறித்து விசாரித்து அவர்களை சரி செய்யும் வகையில் ஒரு ஆசிரியராக எங்கள் கடமையைச் செய்கிறோம். இதில் பெரும் பங்கு பெற்றோர் தரப்பில் உள்ளதை அறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளும் தருகிறோம். இது போன்ற சூழ்நிலையில் ஆசிரியராக இருந்து கூட பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி பெற்றோராகவும் நடந்து கொள்கிறோம். குழந்தை வளர்ப்பு என்பது இன்றைய காலச் சூழ்நிலையில் சவாலாகவே உள்ளது. இருப்பினும் இதை ஒரு கடமையாகவும், அவர்கள் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்றும் எண்ணி செயல்படும் போது இலகுவாகவே இருக்கும்'' என்கின்றனர் பிரபு - மகேஸ்வரி தம்பதியர்.








      Dinamalar
      Follow us