sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்

/

மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்

மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்

மாடுகளுக்கு மடிவீக்க நோய் அபாயம்


ADDED : ஜூலை 17, 2024 11:56 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோய் ஏற்படும்' என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், இந்திய வானிலைத்துறையின் கோவை, வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூருக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி, வரும், 21ம் தேதி வரை, திருப்பூரில், பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம், 32 முதல், 33 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 21 முதல், 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக, மணிக்கு, 28 முதல், 32 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்; பெரும்பாலும் தென் மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும். வரும் நாட்களில் மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு.

விவசாய நிலங்களில் நீர்பாசனம் மற்றும் மருந்து தெளிப்பை நிறுத்தி வைக்க வேண்டும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளதால், காற்றின் வேகத்தை குறைக்க, கோழிக்கூடாரங்களை சுற்றிலும், சாக்குப்பைகளை தொங்கவிட வேண்டும்.

கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பால் கறப்பதற்கு முன், பின், மாடுகளின் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் உதவியுடன் கழுவி, மடிவீக்க நோய் வராமல் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us