/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீருக்கு ஏங்கும் வாயில்லா ஜீவன்கள்!
/
தண்ணீருக்கு ஏங்கும் வாயில்லா ஜீவன்கள்!
ADDED : செப் 09, 2024 11:25 PM

உடைந்த தொட்டி
திருப்பூர், மாட்டுச்சந்தை மைதானத்தில் மாடுகளுக்கு தண்ணீர் ஊற்றி வைக்கும் தொட்டி உடைந்துள்ளது. தண்ணீர் வெளியேறுவதால், தொட்டியை சரிசெய்ய வேண்டும்.
- சங்கர், அமராவதிபாளையம். (படம் உண்டு)
சுற்றிலும் முட்புதர்
கருவம்பாளையம், ஏ.பி.டி., ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சுற்றிலும் முட்புதர் மண்டியிருப்பதால் பயன்படுத்த சிரமமாக உள்ளது.
- சண்முகசுந்தரம், கருவம்பாளையம். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
பல்லடம் - தாராபுரம் ரோடு, நான்கு வழிச்சாலை சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை குழியாகியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை கவனித்து சரிசெய்ய வேண்டும்.
- சண்முகநாதன், பல்லடம். (படம் உண்டு)
திருப்பூர், 5வது வார்டு, எஸ்.ஆர்.வி., நகர், ரேஷன் கடை அருகில், குடிநீர் வினியோகிக்கும் போதெல்லாம் தண்ணீர் வீணாகிறது. மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை.
- சங்கர், எஸ்.ஆர்.வி., நகர். (படம் உண்டு)
தென்னம்பாளையம், 60 அடி ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.
- சுசீலா, தென்னம்பாளையம். (படம் உண்டு)
சாலை சேதம்
திருப்பூர் பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் வேகத்தடை அருகே சாலை சேதமாகி, குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
- விஜி, பூலுவப்பட்டி. (படம் உண்டு)
சுகாதாரக்கேடு
திருப்பூர், 51வது வார்டு, அரண்மனைப்புதுாரில் ரோட்டில் குப்பை கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும்.
- மணிகண்டன், அரண்மனைப்புதுார். (படம் உண்டு)
ரியாக் ஷன்
சாலை சீரமைப்பு
திருப்பூர், பெருமாநல்லுார் - பூலுவப்பட்டி, பி.என்., ரோட்டில் சாலை சேதமானது குறித்து, 'தினமலர்' செய்தி வெளியானது. தற்காலிகமாக சாலையை சீரமைத்துள்ளனர்.
- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)
திருப்பூர் பெரிச்சிபாளையம், வினோபா நகரில் குழாய் பதிக்க குழி தோண்டி அப்படியே இருந்தது குறித்து 'தினமலர்' செய்தியால், குழியை மூடி சாலை அமைத்துள்ளனர்.
- கருப்புசாமி, வினோபா நகர். (படம் உண்டு)