sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மதிப்பெண் குறைந்தால் சோர்வு வேண்டாம்!

/

மதிப்பெண் குறைந்தால் சோர்வு வேண்டாம்!

மதிப்பெண் குறைந்தால் சோர்வு வேண்டாம்!

மதிப்பெண் குறைந்தால் சோர்வு வேண்டாம்!


ADDED : மார் 31, 2024 12:04 AM

Google News

ADDED : மார் 31, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'21ம் நுாற்றாண்டின் திறன்கள்' குறித்து மாற்றம் பவுண்டேஷன் இணை நிறுவனர் உதயசங்கர் பேசியதாவது:

கல்வி கற்கும் நாட்களில் படிப்பை தாண்டிய கூடுதல் திறமை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்பு நாட்களில், ஒழுக்கம் அவசியம். வாழ்வில் ஜெயிக்க ஒழுக்கமே உங்களுக்கு உதவும். பெற்றோர்களே எந்த சூழலிலும், உங்களின் ஆசைகளை குழந்தைகளிடம் திணிக்க கூடாது; கட்டாயப்படுத்த கூடாது.

படிப்பு விஷயத்தில், அவர்களது ஆசைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். மாணவ, மாணவியர் உங்களை உருவாக்கிய ஆசிரியர்களிடம் உங்களை பற்றிக் கேளுங்கள். படிப்பு, வேலைவாய்ப்பு குறித்த விரிவான தேடல் அவசியம். சிறந்த, வேலைவாய்ப்பு தரும் படிப்பை தேர்ந்தெடுங்கள்; பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.

படிப்பில், ஆண், பெண் வேறுபாடு பார்க்க வேண்டாம். பெண்கள் ஆளுமை இல்லாத துறைகளே இல்லை என்ற நிலை வந்துள்ளது. மாணவியர் உயர்படிப்புக்கு தடையே இருக்க கூடாது. ஒவ்வொருவருக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லுாரி கட்டாயம் கிடைக்கும். மதிப்பெண் குறைவு என சோர்ந்து போக வேண்டாம். நல்ல பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப சூழ்நிலையை மாற்ற, உங்களது கல்வி வழிவகுக்கும்.

பெற்றோருக்காக சிறந்த கல்வி

வேலைவாய்ப்பு தேடுங்கள்!உதயசங்கர் மேலும் பேசுகையில்,' நிகழ்ச்சி அரங்குக்குள் வரும் போது கவனித்தேன். பல மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்காக பெற்றோர் குறிப்பெடுக்கின்றனர். ஒரு பெற்றோர், மகனிடம் கூறியது,' உனக்காக உயிரை கொடுத்து, உழைத்து பங்கு செலுத்தி வருகிறேன். இந்த இடத்தில் உனக்கான படிப்பு, வேலைவாய்ப்பு பத்தி சொல்றாங்களாம்; கவனிச்சுக்கப்பா,' என்றார். உங்களை பற்றி, உயர்ந்த எண்ணத்துடன் இருக்கும், பெற்றோருக்காக நீங்கள் சிறந்த கல்வி, வேலைவாய்ப்பை தேடுங்கள்,' என்றார்.








      Dinamalar
      Follow us