/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவராகும் கனவு நனவாகிறது: பாரதி அகாடமி மாணவர் சாதனை
/
மருத்துவராகும் கனவு நனவாகிறது: பாரதி அகாடமி மாணவர் சாதனை
மருத்துவராகும் கனவு நனவாகிறது: பாரதி அகாடமி மாணவர் சாதனை
மருத்துவராகும் கனவு நனவாகிறது: பாரதி அகாடமி மாணவர் சாதனை
ADDED : ஜூன் 08, 2024 11:37 PM

திருப்பூர்;விஜயமங்கலம் பாரதி அகாடமியில், 'நீட்' தேர்வெழுதிய மாணவர்கள் வெற்றி பெற்றனர்.மாணவி கிப்ட்ஷியா கெரின் மற்றும் சுபிக்ஷா ஆகியோர், 683 மதிப்பெண், மாணவி ஸ்ரீநிதி, 682 மதிப்பெண், மாணவன் திருக்குமரன், 680 மதிப்பெண் பெற்றனர். மேலும், 13 மாணவர்கள், 650 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 25 மாணவர்கள், 600 மதிப்பெண்; 50 மாணவர்கள், 575 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றனர்.
பாரதி கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும், சி.பி.எஸ்.இ., மாணவன் அஸ்வந்த், முதல் முயற்சியிலேயே, 644 மதிப்பெண் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்கள், வழிகாட்டிய ஆசிரியர்களை பள்ளி தாளாளர் மோகனாம்பாள் பாராட்டினார். ''நடப்பு கல்வியாண்டில், 50 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக,'' அகாடமி தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.