ADDED : ஆக 06, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், காட்டூர் ஊராட்சி, வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில், 1999- - 2000ம் நிதியாண்டில் ஜவஹர் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிழற்குடை கட்டப்பட்டது. இதை 'குடி'மகன்கள் திறந்தவெளி 'பாராக' பயன்படுத்தி வருகின்றனர்.
நிழற்குடை கட்டடத்திற்குள் எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்கள் நிரம்பி வழிகிறது. பெண்கள் - குழந்தைகள் அப்பகுதிக்கு செல்லவே பயப்படுகின்றனர்.
நிழற்குடை கட்டடத்தை திறந்தவெளி பாராக பயன்படுத்துபவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.