/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கேன் விதிமுறை; அதிகாரிகள் அறிவுரை
/
குடிநீர் கேன் விதிமுறை; அதிகாரிகள் அறிவுரை
ADDED : மே 03, 2024 01:30 AM

பல்லடம்:திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், பல்லடம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் கூறியதாவது: பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி, தயாரிப்பாளர்களின் முழு முகவரி ஆகியவை இடம்பெற வேண்டும். பழச்சாறு தயாரிக்க தரமான பழங்களையும், தரமான குடிநீரால் தயாரிக்கப்பட்ட ஐஸ் ஆகியவற்றையும் பயன்படுத்த வேண்டும்.
குடிநீர் பாட்டில்கள் மற்றும் குடிநீர் கேன்களில் தயாரிப்பு, காலாவதி தேதி இருப்பதுடன், தண்ணீர் தெளிவாகத் தெரியும் வகையிலான கேன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிகவும் பழைய கேன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று, 17 கடைகளில் ஆய்வு நடந்தது. இதில், அழுகிய பழங்கள், அதிக செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட கார வகைகள், சில்லி சிக்கன் உள்ளிட்ட, 10 கிலோ உணவுப் பொருள் அழிக்கப்பட்டது. ஐந்து கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. வட்டார அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாலமுருகன் பங்கேற்றனர்.