sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சீறிப்பாய்ந்த நாய் தெறித்த 'குடி'மகன்கள்

/

சீறிப்பாய்ந்த நாய் தெறித்த 'குடி'மகன்கள்

சீறிப்பாய்ந்த நாய் தெறித்த 'குடி'மகன்கள்

சீறிப்பாய்ந்த நாய் தெறித்த 'குடி'மகன்கள்


ADDED : ஜூலை 02, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில், மதுக்கடைக்கு ஆட்டோ டிரைவர் அழைத்து சென்ற வளர்ப்பு நாய் சீறிப்பாய்ந்ததால், 'குடி'மகன்கள் தெறித்து ஓடினர். ரோட்டில் சென்ற, இருவரையும் கடித்தது.

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் 'டாஸ்மாக்' மதுக்கடைக்கு நேற்று மதியம் ஆட்டோ டிரைவர் ஒருவர், மது அருந்த சென்றார். உடன், தனது வீட்டு வளர்ப்பு நாயை அழைத்து வந்தார். மது அருந்தும் போது, நாயை கட்டி போட்டு விட்டு மது அருந்தினர்.

கடைக்கு வரும் 'குடி'மகன்கள் கூட்டத்தை பார்த்து, பயந்த நாய், கட்டை அவிழ்த்து கொண்டு உள்ளே இருந்தவர்களை கடிக்க சீறிப்பாய்ந்தது. இதனால், தெறித்து ஓடிய 'குடி'மகன்கள், நாயை வெளியே தள்ளி கதவை சாத்தினர். வெளியே சென்ற நாய் ரோட்டில் சென்ற ஒருவரையும், மது வாங்க வந்த ஒருவரையும் கடித்தது. பின் பொதுமக்கள் உதவியுடன் நாய் பிடிக்கும் நபர்களை அழைத்து வந்து, நாயை பிடித்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது






      Dinamalar
      Follow us