/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ - நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்
/
இ - நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்
ADDED : மே 30, 2024 11:51 PM
உடுமலை;உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ஒரு கிலோ கொப்பரை, ரூ.86.86க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, கோட்டமங்கலம், புக்குளம், கணக்கம்பாளையம், மானுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 12 விவசாயிகள், 2,100 கிலோ அளவுள்ள, 42 மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். இத்திட்டத்தின் கீழ், 6 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.81.15 முதல், ரூ.86.86 வரையும், இரண்டாம் தரம், ரூ.68.86 முதல், 76.96 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
ஒருங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
இங்கு, விவசாய விளை பொருட்கள் இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் மறைமுக ஏலத்தில், அதிக நிறுவனங்கள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது.
மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்குரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகை, உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.