sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு; போக்குவரத்து பாதிப்பு

/

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு; போக்குவரத்து பாதிப்பு

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு; போக்குவரத்து பாதிப்பு

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு; போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூலை 24, 2024 08:35 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்காததால், போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாகி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை பிரிகிறது.

உடுமலை நகரப்பகுதியில், 2 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு இந்த ரோடு அமைந்துள்ளது. மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படும் இந்த ரோட்டில், தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில், நகர எல்லை வரை, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இருபுறங்களிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதனால், சென்டர்மீடியனுக்கும், ஆக்கிரமிப்புக்கும் இடையிலான குறுகலான இடத்தில், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து, விபத்துகள் ஏற்படுகிறது.

குறிப்பாக, ராஜகாளியம்மன் கோவில் அருகே, வாசவி நகர் ரோடு சந்திப்பு பகுதியில், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ரோட்டை கடக்க முடியாத அளவுக்கு, நெரிசல் தொடர்கதையாக உள்ளது.

நகர எல்லை வரை, இதே பிரச்னை காணப்படுகிறது. ரோட்டின் இருபுறங்களிலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற, பல முறை வலியுறுத்தியும், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

மழைக்காலங்களில், தண்ணீர் வெளியேற வழியில்லாமல், ரோட்டிலேயே தேங்குகிறது. ரோட்டோரத்தில் கட்டப்பட்ட வடிகால் மாயமாகி வருகிறது.

மாநில நெடுஞ்சாலையில், அதிகரித்துள்ள விபத்துகளை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், விபத்துகளால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us