sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு போட்டி; பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

/

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு போட்டி; பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு போட்டி; பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு போட்டி; பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு


ADDED : ஜூன் 03, 2024 12:09 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, உடுமலையில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் வரும் 8ல் நடக்கிறது.

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டில் இவ்விரண்டு சங்கம் உட்பட தேஜஸ் ரோட்டரி, சுபாஷ் கல்வி அறக்கட்டளை இணைந்து போட்டிகள் நடத்துகின்றனர். போட்டிகள் ஜூன் 8ம் தேதி பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நடக்கிறது.

ஓவியப்போட்டியில், ஒன்று முதல் மூன்று வயது வரை 'வீடும் தென்னை மரமும்', நான்கு, ஐந்து வகுப்புகளுக்கு 'மலையின் அழகு', ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 'உனக்கு பிடித்த வனவிலங்கு', ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு 'கொதிக்கும் பூமி', பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கு 'ஆழ்கடல் அதிசயங்கள்' என்ற தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பேச்சுப்போட்டிக்கு, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு 'சுற்றுச்சூழலை பாதுகாக்க உனது யோசனைகள்', ஆறு முதல் எட்டாம் வகுப்பு 'வன உயிரின பாதுகாப்பில் நமது பங்கு', ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கு 'மாறிவரும் காலநிலை', பிளஸ் 1,2 வகுப்புகளுக்கு 'நெகிழி பயன்பாடும் இன்றைய வாழ்வும்' என்ற தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

போட்டிகள், ஜூன் 8ல் காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 வரை நடக்கிறது. மதியம் சுற்றுச்சூழல் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில், பங்கேற்க விருப்பமுள்ளோர், 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, விபரங்களை வழங்க சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us