/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான ரோட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
பிரதான ரோட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : செப் 06, 2024 02:33 AM
உடுமலை;மடத்துக்குளம் - தாராபுரம் ரோட்டில், கணியூர், காரத்தொழுவு, சோழமாதேவி, வேடபட்டி என 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
விவசாய நிலங்கள், பள்ளிகள் மற்றும் பிரதான ரோட்டின் இரு புறமும் விதி மீறியும், உரிய பாதுகாப்பு மற்றும் ஒரு கி.மீ., சுற்றளவில் செங்கல் சூளைகள் அமைக்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், மாசு கட்டுப்பாட்டு விதி மீறி, ஏராளமான செங்கல்சூளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து வெளியேறும் புகையால், ரோடு புகை மூட்டமாக மாறுகிறது. சுற்றுப்புற கிராம மக்களும், கால்நடைகளும், பல்வேறு நோய்களால் பாதிக்கின்றனர்.
எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கையும், விதி மீறி செயல்படும் செங்கல் சூளைகளை அகற்றவும் வேண்டும், என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.