/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூனை குட்டி போட்டாலும் வரி தான்
/
பூனை குட்டி போட்டாலும் வரி தான்
ADDED : மார் 01, 2025 06:25 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெ., பேரவை சார்பில், ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம் நல்லுாரில் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் முன்னிலை வகித்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கி, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெ., கொண்டு வந்து, தற்போது நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும், பழனிசாமி ஆட்சிக்கு வரும்போது மீண்டும் செயல்படுத்துவார்.
இன்று மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. வீட்டு வரி, சொத்து வரி உயர்ந்து விட்டது. பாதாள சாக்கடை வரி, 129 சதவீதம் உயர்ந்து விட்டது. நாய், பூனை வளர்த்தாலும், பூனை குட்டி போட்டாலும் வரி போடுகின்றனர்.
பழனிசாமி ஆட்சியில், 10 ஆண்டுகாலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை; ஆனால் இன்று, வீட்டு வரி நுாறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்துவிட்டது.
மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எம்.ஜி.ஆர்., மக்களை நேசித்தார்; சொத்துக்களை உங்களுக்கே கொடுத்தார். தமிழக மக்களையே தனது சொந்தங்களாக நினைத்தவர் ஜெயலலிதா.
தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் ஏதுமில்லை. இன்னும் பத்தே அமாவாசையில், பழனிசாமி தலைமையில், தமிழகத்தில் நல்லாட்சி அமையும்.
இவ்வாறு, அவர் பேசினார். எம்.எல். ஏ.,க்கள் விஜயகுமார், ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.