/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு
/
கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 03, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காமணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தினமும் கோவை - மதுரை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார் ரயில்கள் சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.
ஆனால், இங்கு கண்காணிப்பு கேமரா அமைக்கப்படாமல் உள்ளது. ரயில் பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.