sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தளி ரோடு பிரச்னைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

/

தளி ரோடு பிரச்னைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

தளி ரோடு பிரச்னைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

தளி ரோடு பிரச்னைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு


ADDED : மே 12, 2024 10:53 PM

Google News

ADDED : மே 12, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;தளி ரோட்டில், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், விபத்துகள் அதிகரித்துள்ளது.

உடுமலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தளி ரோடு பிரிகிறது. இந்த ரோட்டில், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், அரசுப்பள்ளிகள், கிளை நுாலகம் அமைந்துள்ளன.

பிரசித்தி பெற்ற, சுற்றுலா தலங்களான, திருமூர்த்திமலை, அமராவதி அணை, மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு, நகரின் மையப்பகுதியில், அமைந்துள்ள இந்த ரோடு வழியாகவே, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் செல்ல வேண்டும்.

மேலும், பஸ் ஸ்டாண்டில் இருந்து சுற்றுலா தலங்கள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும், இந்த ரோடு வழியாகவே செல்கின்றன; நகருக்குள் நுழையவும் தளி ரோட்டையே பயன்படுத்துகின்றனர்.

இதனால், காலை, மாலை நேரங்களில், தளி ரோட்டில், போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, நுாலகம் முதல் சிக்னல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் தளி ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்றினர்; அங்குள்ள கடைகளின் முன், இரு சக்கர வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய சுழற்சி முறை பின்பற்றப்பட்டது. இதனால், நெரிசலும், விபத்துகளும் தவிர்க்கப்பட்டது.

தற்போது தளி ரோட்டில், கார்கள் நிறுத்த தடைவிதிக்கப்பட்டு, குட்டைத்திடலில், பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறையை யாரும் கண்டுகொள்வதில்லை.

ரோட்டோரத்தில், இருபுறங்களிலும் கார்களை நிறுத்துவதால், எதிரே வரும் வாகனங்களுக்கு கூட வழிவிட முடியாத நிலை உருவாகி, நெரிசல் ஏற்படுகிறது.

நகரின் முக்கிய ரோட்டில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீசார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், விசேஷ நாட்களில், இந்த ரோட்டில் பயணிக்கவே வாகன ஓட்டுநர்கள் தயங்கும் நிலை உள்ளது; விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us