sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கண் அழுத்த நோய் பாதிப்பு; மனித சங்கிலியில் விழிப்புணர்வு

/

கண் அழுத்த நோய் பாதிப்பு; மனித சங்கிலியில் விழிப்புணர்வு

கண் அழுத்த நோய் பாதிப்பு; மனித சங்கிலியில் விழிப்புணர்வு

கண் அழுத்த நோய் பாதிப்பு; மனித சங்கிலியில் விழிப்புணர்வு


ADDED : மார் 14, 2025 12:45 AM

Google News

ADDED : மார் 14, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மார்ச் 10 முதல், 15 வரை உலக குளுக்கோமா வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கண்ணில் ஏற்படும் 'குளுக்கோமா' (கண் அழுத்த நோய்) பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி விழிப்புணர்வு ஊர்வலம் திருப்பூரில் நடத்தப்பட்டது.

திருப்பூர், தி ஐ பவுண்டேசன் சார்பில், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா முதல் ரயில்வே மேம்பால சந்திப்பு, கூட்டுறவு காய்கறி சந்தை வளாகம் வரை மனித சங்கிலி ஊர்வலம் நடந்தது. மருத்துவமனை பணியாளர்கள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

தி ஐ பவுண்டேசன் மருத்துவமனை இயக்குனர் சித்ரா ராமமூர்த்தி தலைமை வகித்தார். கோவை தி ஐ பவுண்டேசன் குளுக்கோமா மற்றும் குழந்தைகள் கண் மருத்துவ பிரிவு டாக்டர் முரளீதர் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.

'குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us