நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2, லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், காலேஜ் ரோட்டில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில், சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
மாணவியர் விடுதி பொறுப்பாளர் சித்ராபானு தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 38 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.