sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சின்ன வெங்காய நாற்று உற்பத்தி பணிகளில் விவசாயிகள் தீவிரம்

/

சின்ன வெங்காய நாற்று உற்பத்தி பணிகளில் விவசாயிகள் தீவிரம்

சின்ன வெங்காய நாற்று உற்பத்தி பணிகளில் விவசாயிகள் தீவிரம்

சின்ன வெங்காய நாற்று உற்பத்தி பணிகளில் விவசாயிகள் தீவிரம்


ADDED : மார் 04, 2025 06:18 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; சின்னவெங்காய சாகுபடிக்கு, விளைநிலங்களில் நாற்றங்கால் அமைத்து, பணிகளை உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில், ஆண்டுக்கு இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. முன்பு நேரடி நடவு முறையை விவசாயிகள் பின்பற்றி வந்தனர்.

தற்போது, விளைநிலங்களில், நாற்றங்கால் அமைத்து நாற்று உற்பத்தி செய்து, நடவு செய்கின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங்காய சாகுபடியில் ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகிறது. குறிப்பாக, நாற்றுக்கும், விதை வெங்காயத்துக்கும் சீசனில் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக பெரும்பாலானவர்கள் நடப்பு சீசனில், விளைநிலங்களில், நாற்றங்கால் அமைத்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு, 13 பாத்தி அளவுக்கான நாற்றுகள் தேவைப்படுகிறது.

நாற்று நடவு செய்யும் போது, 90 நாளில், சின்னவெங்காயத்தை அறுவடை செய்ய முடிகிறது. நடப்பு சீசனில், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.

சின்ன வெங்காய நாற்று உற்பத்திக்கான விதைகளை தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியத்தில் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளுக்கும் தரமான நாற்று கிடைக்கும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us