/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைந்த தண்ணீரிலும் அவரை விவசாயிகள் ஆர்வம்
/
குறைந்த தண்ணீரிலும் அவரை விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 11, 2024 12:09 AM
உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதியில், கிணறு மற்றும் போர்வெல்களில் கிடைக்கும் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு, தோட்டக்கலை பயிர் சாகுபடியில், அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கோடை காலத்தில், தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கொத்தவரை, செடி அவரை உள்ளிட்ட சாகுபடியை மேற்கொள்கின்றனர். அவ்வகையில், செடி அவரை கணிசமாக நடப்பு சீசனில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அவரை உள்ளூர் சந்தை மட்டுமல்லாது பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: நடவில் இருந்து, 50 நாட்களுக்கு பிறகு, செடி அவரை அறுவடைக்கு வர துவங்குகிறது. தொடர்ந்து நான்கு மாதம் வரை, காய் பறிக்கலாம். உழவர் சந்தை மற்றும் உள்ளூர் சந்தைகளில், எளிதாக விற்பனை செய்யலாம். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், செடிகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தினால், கூடுதல் மகசூல் பெறலாம். பிற மாவட்டங்களுக்கும் அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.