sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தட்டுப்போர் அமைக்க விவசாயிகள் தீவிரம்

/

தட்டுப்போர் அமைக்க விவசாயிகள் தீவிரம்

தட்டுப்போர் அமைக்க விவசாயிகள் தீவிரம்

தட்டுப்போர் அமைக்க விவசாயிகள் தீவிரம்


ADDED : மார் 05, 2025 03:55 AM

Google News

ADDED : மார் 05, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்,:கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் தீவனப் பயிர்களாக மக்காச்சோள தட்டுகள் மற்றும் மஞ்சள் சோள தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்காக, விவசாயிகள், சோளத்தட்டுகளை சேகரித்து வைத்து தட்டுப்போர் அமைக்கின்றனர். தேவை அதிகம் உள்ளதால், கால்நடை வளர்ப்பில் ஈடுபடாத விவசாயிகளும், சோளப்யிர் சாகுபடி செய்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். பல்லடம் வட்டாரத்தில், மக்காச்சோளமும், மஞ்சள் சோள பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

விவசாயிகள் கூறுகையில், '40 கத்தை கொண்ட மக்காச்சோள தட்டுகள், 1,000 ரூபாய்க்கும், 64 கத்தை கொண்ட மஞ்சள் சோள தட்டு, 2,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலில் நன்கு காய வைத்து பக்குவப்படுத்தி தட்டுப்போர் அமைக்கப்படுகிறது. இதனால், ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு தீவனமாக இவற்றை பயன்படுத்த முடியும். கடந்த காலத்தில், விவசாயிகள் பயன்படும் வகையில் அரசே மானிய விலையில் இவற்றை வழங்கியது.

அதுபோல், தமிழக அரசு மானிய விலையில் இவற்றை வழங்கினால், கோடை காலத்தில் ஏற்படும் உலர் தீவன தட்டுப்பாடு ஏற்படாமல், கால்நடை விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us