sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேனீ வளர்க்க மானியம் தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்

/

தேனீ வளர்க்க மானியம் தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்

தேனீ வளர்க்க மானியம் தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்

தேனீ வளர்க்க மானியம் தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : மார் 06, 2025 11:36 PM

Google News

ADDED : மார் 06, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மகரந்த சேர்க்கையை அதிகரித்து, மகசூலுக்கு உதவும், தேனீக்களை வளர்க்க தேவையான பெட்டிகளை தோட்டக்கலைத்துறை மானியத்தில் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னந்தோப்புகளில் களைகளை கட்டுப்படுத்த, தொடர்ந்து களைக்கொல்லி தெளித்தல் உட்பட செயல்பாடுகளால், வளம் பாதித்து, மகசூல் குறைகிறது. மரங்களில் காய்ப்புத்திறன் குறைவுக்கு, மகரந்த சேர்க்கை பாதிப்பு முக்கிய பிரச்னையாக உள்ளது.

தென்னை மரங்கள் மற்றும் காய்கறி சாகுபடியில், மகரந்த சேர்க்கைக்கு உதவும், தேனீக்கள், இயல்பாக கூடு கட்டுவது, குறைந்து, முற்றிலுமாக மறைந்து வருகிறது. எனவே, தேனீக்களை பெட்டியில் வைத்து வளர்த்து, மகரந்த சேர்க்கையை அதிகரிக்கவும், கூடுதல் வருவாய் பெறவும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், தேனீ வளர்ப்பு பெட்டிகளின் விலை அதிகமாக இருப்பதுடன், அதற்கான தொழில்நுட்பங்களும் தெரியாமல் குழப்பமடைகின்றனர்.

முன்பு, தோட்டக்கலைத்துறை சார்பில், தேனீ வளர்ப்புக்கு ஊக்கமளிக்கப்பட்டு, பயிற்சிகளும், மானிய விலையில், பெட்டிகளும் வினியோகிக்கப்பட்டன.இந்த மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us