sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

/

சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

சார்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


ADDED : ஜூலை 03, 2024 09:34 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், அதிகாரிகள் உடந்தையோடு, முறைகேடாக ஆவணம் பதியப்பட்டு, 10 கோடி மதிப்பிலான சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதை அறிந்த விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வீரப்பன் கூறுகையில், 'கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், பணத்தை பெற்றுக்கொண்டு, தனி நபருக்கு சொந்தமான நிலங்கள், கோவில் நிலங்கள் முறைகேடு ஆவணங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.

இதில், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி, நாளை, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,' என்றார்.






      Dinamalar
      Follow us