/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொன்னாபுரத்தில் 2ம் நாளாக விவசாயிகள் போராட்டம்
/
பொன்னாபுரத்தில் 2ம் நாளாக விவசாயிகள் போராட்டம்
ADDED : ஜூலை 05, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தனியார் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் நடத்திய போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.
தாராபுரத்தை அடுத்த பொன்னாபுரம் பகுதியில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில், தனியார் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும், மாலை, 4:00 மணி வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.