/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 01, 2024 11:49 PM
திருப்பூர்:வீரபாண்டி பகுதியில் குளம், குட்டைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி, வீரபாண்டி பகுதியில், சட்டவிரோதமாக இயங்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் குருசாமி பேசுகையில், ''கடந்த சில தினங்களுக்கு முன், சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் விடுவதாக புகார் வந்தது. நேரில் சென்று பார்க்க சென்றபோது, வீரபாண்டி போலீசில் பொய்யான புகார் அளித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தினால், பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். அதன் காரணமாக, நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைககள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்,'' என்றார்.