ADDED : செப் 08, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை நகரம் பெரியார் நகரில், மின்கம்பியில் அடிபட்டு மயில் உயிரிழந்தது.
உடுமலை நகரப்பகுதியில், அதிகளவு மயில்கள் உலா வரத்துவங்கியுள்ளன. அவ்வகையில், பெரியார் நகரையொட்டி உள்ள காலியிடத்தில் இரை தேடி வந்த, பெண் மயில், ரோட்டை கடந்து பறக்கும் போது மின்கம்பியில் அடிபட்டு உயிரிழந்தது.
இது குறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், மயிலின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச்சென்றனர்.