sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண்ணை கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி கைது

/

பெண்ணை கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி கைது

பெண்ணை கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி கைது

பெண்ணை கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி கைது


ADDED : செப் 01, 2024 01:55 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் கரையில், ஆக., 25ம் தேதி, கொழுமம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த சேகர் மனைவி சாரதா, 29, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொழுமத்தை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் பாண்டித்துரை, 27, அவரது கள்ளக்காதலி லட்சுமி, 32, ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

சாரதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவுடன் கள்ளத்தொடர்பு இருப்பது குடும்பத்தினருக்கு தெரிந்துள்ளது.

கடந்த, 24ம் தேதி இரவு, கணவரும், இரு உறவினர்களும், சாரதாவையும், மாரிமுத்துவையும் கையும், களவுமாக பிடித்து தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய சாரதா, உறவினரான லட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளார். லட்சுமி அவரது கள்ளக்காதலனான பாண்டித்துரைக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.

அதன்பின், மதுரைக்கு பஸ் ஏற்றி விடுவதாகக் கூறி, சாரதாவை பைக்கில் அழைத்துச் சென்ற பாண்டித்துரை, மடத்துக்குளம் ஆற்றுக்கு அழைத்துச் சென்று, சாரதாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார்.

அதன் பின், கை, கால்களை கட்டி, ஆற்றில் உடலை வீசியது தெரியவந்துள்ளது. நடந்த சம்பவத்தை லட்சுமியிடம் கூறி, இருவரும் தலைமறைவாக இருந்த போது கைது செய்துள்ளோம்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us