
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சக் ஷம்' அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை அவயம் வழங்குவதற்கான அளவீடு முகாம், திருப்பூர் மங்கலம் ரோடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விண்ணப்பித்திருந்த, 16 நபர்களுக்கு அளவீடு மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கான செயற்கை அவயம் அடுத்த மாதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், 36 பேரின் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, எட்டு பேர் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். துளசி பார்மசி உதவியுடன், 54 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதித்து, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.