sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆண்டிபாளையம் குளக்கரையில் 'பனை காக்கும் நண்பர்கள்' சேவை

/

ஆண்டிபாளையம் குளக்கரையில் 'பனை காக்கும் நண்பர்கள்' சேவை

ஆண்டிபாளையம் குளக்கரையில் 'பனை காக்கும் நண்பர்கள்' சேவை

ஆண்டிபாளையம் குளக்கரையில் 'பனை காக்கும் நண்பர்கள்' சேவை


ADDED : ஆக 25, 2024 10:57 PM

Google News

ADDED : ஆக 25, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், ஆண்டிபாளையம் குளக்கரையை சுற்றிலும், பனை விதைகள் நடப்பட்டது. குளத்தை துார்வாரி சுத்தம் செய்ததும், நிலத்தடி நீர்மட்டத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, பனைவிதைகள் நடப்பட்டன.

குளக்கரையில் நட்ட விதைகள் முளைத்து, பனைமரங்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில், பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர், நேற்று பனை மரங்களை பராமரித்தனர். சீமைக்கருவேல முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பனைமரத்துக்கு கவாத்து செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

''குளக்கரைகளில், மரக்கன்று நட்டு வளர்க்கலாம்; குறிப்பாக, பனை மரம் வளர்ப்பது அதிகபட்ச பயன்களை அளிக்கும். தரையில் உள்ள தண்ணீரை வேகமாக நிலத்தடி நீர் மட்டமாக கொண்டு சேர்க்கும். நிலத்தடிநீரை பாதுகாக்கும் அரணாக பனை மரம் விளங்குகிறது'' என பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர் தெரிவித்தனர். *

ஆண்டிபாளையம் குளக்கரையில் உள்ள பனை மரங்கள் பராமரிப்பு பணியை, 'பனை காக்கும் நண்பர்கள்' அமைப்பினர் நேற்று மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us