sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விநாயகர் ஊர்வலம் வழிகாட்டு நெறிமுறை

/

விநாயகர் ஊர்வலம் வழிகாட்டு நெறிமுறை

விநாயகர் ஊர்வலம் வழிகாட்டு நெறிமுறை

விநாயகர் ஊர்வலம் வழிகாட்டு நெறிமுறை


ADDED : செப் 06, 2024 01:52 AM

Google News

ADDED : செப் 06, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,' என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தற்காலிக விநாயகர் சிலைகள் நிறுவி, வழிபடும் நடைமுறை குறித்து, சட்டம் - ஒழுங்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பொதுமக்கள் மற்றும் அமைப்பினரால் நிறுவப்படும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் பயன் படுத்த வேண்டும்.

சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் மற்றும் பொங்கலுார் பி.ஏ.பி., வாய்க்கால், எஸ்.வி.புரம்., பி.ஏ.பி., வாய்க்கால், கணியூர், அமராவதி ஆறு, கெடிமேடு பி.ஏ.பி., வாய்க்கால் ஆகிய இடங்களில் மட்டுமே விசர்ஜனம் செய்ய வேண்டும். மேலும், காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us