ADDED : மார் 22, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களில் ஆங்காங்கே குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால், அங்கு சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். ஆனால் அவர்கள் முகம் சுழிக்கும் வகையில், குப்பை, கழிவுகள் காணப்படுகின்றன.
இதனால், அங்கு சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சி சுகாதாரத்துறையினர் பஸ் ஸ்டாண்டில் குப்பை, கழிவுகளை தேங்க விடாமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

