/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செய்முறை நோட்டுகளும் அரசு வழங்க எதிர்பார்ப்பு
/
செய்முறை நோட்டுகளும் அரசு வழங்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 04, 2024 10:02 PM
உடுமலை : பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டபொருட்களில் ஒன்றாக, செய்முறை நோட்டுகளும் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் கல்வி இடைநிற்றல் இல்லாமல் தொடர்வதற்கு மாணவர்களுக்கு புத்தகப்பை, வண்ணபென்சில்கள், பாடப்புத்தகங்கள் முதல் லேப்டாப் வரை, அவர்கள் படிப்பதற்கு தேவையான 14 வகையான நலத்திட்டப் பொருட்களை கல்வியாண்டுதோறும் வழங்கப்படுகிறது.
ஆனால், செய்முறை பாடங்களுக்கு மட்டும், மாதிரிப்புத்தகம் மற்றும் அதற்கான நோட்டுகள், அரசின் சார்பில் வழங்கப்படுவதில்லை.
சில பள்ளிகளில் மாணவர்களிடம் தொகை பெற்றுக்கொண்டு, நிர்வாகத்தினர் வாங்கி தருகின்றனர். சில பள்ளிகளில் மாணவர்களாகவே வாங்கிக்கொள்கின்றனர்.
மேல்நிலை வகுப்புகளில் இன்னும் கட்டணம் செலுத்தி நோட்டுகளை வாங்க முடியாத நிலையில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் அரசு பள்ளியில் படிக்கின்றனர்.
நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக செய்முறை நோட்டுகளையும் வழங்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
மாணவர்கள் மனதளவிலும் ஏழ்மையை உணராமல், சமநிலையான கல்வி பெறுவதற்கு நலத்திட்டபொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் செய்முறைக்கான புத்தகம், நோட்டுகளையும் அரசு வழங்குவதனால், மாணவர்கள் முழுமையான பயன்பெற முடியும்.