sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பசுமையாகும் வடுகபாளையம் ஊராட்சி 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

/

பசுமையாகும் வடுகபாளையம் ஊராட்சி 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

பசுமையாகும் வடுகபாளையம் ஊராட்சி 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

பசுமையாகும் வடுகபாளையம் ஊராட்சி 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு


ADDED : ஜூலை 03, 2024 02:45 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், ஊராட்சியில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சியில், 2019ம் ஆண்டு முதல், மண்ணின் மரபு சார்ந்த மரங்களும், பறவைகளுக்கு உணவளிக்கும் வகையில், பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

முதலில் நடவு செய்த பகுதிகளில், பசுமையான சோலையாக மாறி, துாய காற்று, பருவம் தவறாத மழை மட்டுமின்றி, பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களும் வாசம் செய்யும் குறு வனமாக மாறியுள்ளது.

வடுகபாளையம், லிங்கமநாயக்கனுார், சுங்காரமடக்கு ஆகிய கிராமங்களில், மயான பூமிகள் சுத்தப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அதே போல், மூன்று கிராமங்களிலும், குட்டை கரைகள், ஓடை தடுப்பணை பகுதி, ரோடுகளின் இரு புறமும் பசுமை மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், இந்த ஊராட்சியில், 3 ஏக்கர் பரப்பளவில், முட் செடிகள் முளைத்தும், புதர் மண்டி காணப்பட்ட மந்தை வெளி புறம்போக்கு மற்றும் ஓடை புறம்போக்கு, 3 ஏக்கர் பரப்பளவில் இருந்த விளையாட்டு மைதானம் ஆகியவற்றிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

நடப்பாண்டு, 10 வது திட்டத்தின் கீழ், பூவரசன், நீர் மருது, தான்றி, நாவல், புங்கன், வேம்பு, இலுப்பை, அயல்வாகை, மந்தாரை, சொர்க்கம் என, 585 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

ஊராட்சி தலைவர் வெங்கடேசன் கூறுகையில், ''வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மூன்று கிராமங்களிலும், முட் காடாக காணப்பட்ட பகுதிகள் தற்போது, பசுமையான வனமாக மாறியுள்ளது. மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, ஊராட்சி பணியாளர்கள், வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் வாயிலாக நீர் ஊற்றி, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. முதலில் நடவு செய்யப்பட்ட கன்றுகள், தற்போது மரமாக வளர்ந்துள்ளன,'' என்றார்.






      Dinamalar
      Follow us